/* */

ஓட்டல் அதிபர் மகளிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி-ரூ.49 ஆயிரம் பறிப்பு

ஓட்டல் அதிபர் மகளிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி-ரூ.49 ஆயிரம் பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓட்டல் அதிபர் மகளிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி-ரூ.49 ஆயிரம் பறிப்பு
X

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் குடியான தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சோழபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 14-ந் தேதி இரவு இவருடைய வீட்டுக்குள் நுழைந்த 2 பேர் விஜயகுமாரின் மகள் பிரியங்காவிடம் (28) கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டனர்.

மேலும் விஜயகுமாரிடமும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.49 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பிரியங்கா சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விஜயகுமாரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது, ராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் (24), நடையழகன் (24) ஆகிய 2 பேர் விஜயகுமாரின் வீட்டுக்குள் புகுந்து சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜபுரத்தில் பதுங்கி இருந்த கவியரசன், நடையழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து சங்கிலி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Jan 2022 10:01 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்