/* */

முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

கும்பகோணம் அருகே, முருக்கங்குடியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
X

மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதி, முருக்கங்குடி வருவாய் சரகத்தில், மொத்தம் 20 கிராமங்கள் உள்ளன. இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினரால், மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எம்பி ராமலிங்கம் ஆகியோர், அரசு நிவாரண உதவிகளை வழங்கினர். இதில், முழுவதுமாக சேதமடைந்த 3 வீடுகளுக்கு ரூபாய் 3 5500ம், வீட்டின் பாதிப் பகுதி சேதமடைந்த 20 வீடுகளுக்கு ரூபாய் 4100 என மொத்தம் 23 வீடுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜா, சரவணன் ஒன்றிய கவுன்சிலர்கள் மஞ்சுளாதேவி முருகானந்தம், கிறிஸ்டோபர்ராஜ், தண்டந்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், கும்பகோணம் தாசில்தார் தங்க.பிரபாகரன், மண்டல துணை வட்டாட்சியர் பாக்யராஜ், வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்