/* */

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையில் முதல் தவணை வழங்கல்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 45 கோடி நிலுவைத் தொகையில் முதல் தவணை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையில் முதல் தவணை வழங்கல்
X

பைல் படம்.

திருப்பனந்தாள் அருகே கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்பட்ட கரும்புகளை ஆலை நிர்வாகத்தின் ஒப்புதலோடு திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு நிலுவை தொகையை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு சார்பில் கடந்த 5 வருடமாக போராடி தற்போது நீதிமன்றம் மூலம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் தீர்வு பெற்றனர்.

இந்த உத்தரவின்படி கலைப்பு அதிகாரி நியமனம் செய்த தீர்ப்பாயம் திவால் விதிகளின்படி பணப்புழக்க விதிமுறைகளுடன் ஒரு சமரசம் ஏற்பாடு திட்டம் பெறப்பட்டது. விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.78.48 கோடி இருந்தது. கடன் தீர்வுத் திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் 57 சதவீத தீர்வு தொகையான ரூ 45.01 கோடியை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனியார் நிறுவனம் ஒரு வருட காலத்திற்குள் நான்கு தவணைகளில் செலுத்தப்பட வேண்டும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் சதாசிவன் கலைப்பு கமிட்டி செயலாளரை பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் தலைமையில் நேரில் சந்தித்து முதல் தவணை நிலுவை தொகையை விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணை நிலுவை தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 9 Jun 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!