/* */

கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு

கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் தஞ்சை மண்டல தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு
X
கும்பகோணத்தில் இந்து மகாசபா மண்டல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கும்பகோணம் செட்டி மண்டபத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் தஞ்சை மண்டல தலைமை அலுவலகத்தை தேசிய துணைத் தலைவரும் மாநில தலைவருமான பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார். மேலும் தஞ்சை மண்டலத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் இராம நிரஞ்சன் தலைமையில், சாம்ப வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு இந்துமகா சபாவின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார். தஞ்சை மண்டல பொதுச் செயலாளர் இந்திரஜித் (எ) செல்வா வரவேற்றார். ஆலய பாதுகாப்பு பிரிவு தஞ்சை மாவட்ட செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கும்பகோணத்தை ஆன்மீக நகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மற்றும் நவகிரகங்களை மையப்படுத்தி கும்பகோணத்தில் யாத்ரி நிவாஸ் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 20 Jan 2022 5:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?