/* */

மோகூர் ஊராட்சியில் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கல்

மோகூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

மோகூர் ஊராட்சியில் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கல்
X

மோகூர் ஊராட்சியை சேர்ந்த 250 விவசாயிகளுக்கு  தென்னங்கன்றுகளை வழங்கும் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாவு .

மோகூர் பஞ்சாயத்தை சேர்ந்த 250 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 500 தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் அய்யாவு வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த மோகூர் பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 250 விவசாய குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் 100 சத மானியத்தில் வழங்கப்பட்டன. கலைஞர் திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாய குடும்பங்கள் தென்னங்கன்றுகள் நடவு செய்து ஐந்து வருட காலத்தில் வருமான வாய்ப்பு கொடுக்கும் என்ற நோக்கில் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மோகூர் பஞ்சாயத்தில் மோகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா அய்யாவு தலைமையில் விவசாய குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் துணை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள மானிய திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளை தேர்வு செய்தனர்.

வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் ஐயா மணி ராஜு ஆகியோர் உழவன் திட்ட போர்டலில் விவசாயிகளின் அடிப்படை விபரங்களை பதிவு செய்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி கூறினார்.

Updated On: 27 Feb 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்