/* */

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் தீயனைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
X

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் சில நேரங்களில் கிணறுகளில் தவறி விழுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் வாசுதேவநல்லூர் புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மான் கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை மீட்டனர்.

மானுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதன் பின்பு கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார் மானுக்கு சிகிச்சை அளித்தார். தீயணைப்புத்துறையினர் மானை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 17 Jun 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்