/* */

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை. விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

குற்றாலம் பிரதான அருவி.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஒன்று குற்றாலம். இன்று ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்தப் பருவநிலையில் மெல்லிய சாரலுடன் காற்றுடன் சேர்ந்து சாரல் மழை பெய்யும். இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பருவநிலை காலங்களில் அறிவியலில் போதிய தண்ணீர் இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மாலை நேரங்களில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் தற்போது வரை விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது, ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆனது ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் சூழலில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும், தண்ணீரானது இலை, தளைகளுடன் சேர்ந்து அதிவேகமாக கொட்டி வருவதன் காரணமாக இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து தண்ணீரானது குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Sep 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!