/* */

TNPSC தேர்வு எழுதுபவரா? நாளை முதல் இலவச பயிற்சி தேர்வுகள்

தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நாளை முதல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A தேர்வுக்கான இலவச பயிற்சி தேர்வுகள் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

TNPSC தேர்வு எழுதுபவரா? நாளை முதல் இலவச பயிற்சி தேர்வுகள்
X

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2,2A முதல்நிலை தேர்வு வரும் 21.05.2022 அன்று நடைபெற உள்ளது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்து வரும் 06.03.2022 முதல் 15.05.2022 வரை பிரதி ஞாயிற்றுக்கிழமை இலவச பயிற்சி தேர்வுகள் தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடைபெறும்.

இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 9626252500, 9626253300, 9944317543 என்ற அலைபேசி எண்ணில் பதிவு செய்து தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுகிறோம்.

முதலாவது மாதிரி தேர்வு வரும் 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டி தேர்வெழுத உள்ள பட்டதாரி இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெற கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 March 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் 42 மனுக்கள் ஏற்பு: நாளை இறுதி பட்டியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  5. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  7. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  8. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  9. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  10. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்