/* */

தென்காசி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்ப மனு

தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்ப மனு
X

தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்கள் அரசியல் கட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

தென்காசி மாவட்டம் தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை தாங்கினார்.

தேர்தல் பொறுப்பாளர்களான, மயூரா ஜெயக்குமார், எம்.எஸ்.காமராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன் இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சந்தோஷ், தென்காசி வட்டார தலைவர் பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2021 9:35 AM GMT

Related News