குற்றாலத்தில் தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

குற்றாலத்தில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குற்றாலத்தில் தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
X

குற்றாலத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை மாதங்கள் ஆகும். இந்த காலநிலையில் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதி இல்லாத செண்பகா தேவி அருவி, தேனருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டும்.

இந்த பருவநிலை காலங்களில் இதமான தென்றல் காற்றுடன் சாரல் மழை பொழியும் இதனை அனுபவிக்க ஏராளமான தமிழ்நாடு மற்றும் அல்லாது வெளி மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அவ்வப்போது மழை அதிகரித்து அருவிகளில் திடீரென வெள்ளம் ஏற்படும். இந்த வெள்ளத்தில் சிக்குபவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சாதுரியமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடர்கள் தொடர்பாக தீயணைப்பு மீட்பு துறையினர் சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் குற்றாலம் பிரதான அருவியில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது விபத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.

குறிப்பாக விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த உடன் விரைந்து வந்து வழியில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி துரிதமாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி தவித்த இளைஞரை மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பாறையின் இடுக்கி சிக்கிக்கொண்ட இளைஞரை தீயணைப்பு வீரர்கள் கயிறு வழியாக சென்று தத்துரூபமாக மீட்டனர்.

தீயணைப்புத் துறையின் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நடைபெற்ற ஒத்திகை பயிற்சியை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பரபரப்புடன் கண்டு ரசித்தனர்.

Updated On: 19 Sep 2023 11:20 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை