/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகம்

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகம்
X

தமிழகத்தில் நேற்று 9 மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்திற்கு அக்டோபர் 6ஆம் தேதி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் 9ஆம் தேதி தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பாதுகாப்பு பணிகள், பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பத்திரிக்கை செய்திகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக மக்கள் தொடர்பு அலுவலம் தொடர்பு கொண்டபோது தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற குழப்பத்தில் பொது மக்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் போது கூட செய்தியாளர்களுக்கு அழைப்பில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லாததால் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Updated On: 14 Sep 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை