/* */

குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.\

HIGHLIGHTS

குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

குழந்தைகளை அதிகம் பாதிப்படையச் செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயில் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த தடுப்பூசியானது ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாத குழந்தைகளுக்கு அளிக்கப்படும். 3 தவனையாக செலுத்தப்படும் 12 ஆயிரம் மதிப்புள்ள தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த தடுப்பூசியை அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வாரம்தோறும் புதன்கிழமை செலுத்தப்படும் எனவும் எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பு ஊசி செலுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 July 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!