சாலைகளை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சாலைகளை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

பட விளக்கம்: சாலைகளை சீரமைக்க கோரி ஆறு கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

6 கிராமங்களில் சேதமடைந்த கிராமப்புற இணைப்பு சாலைகளை சீரமைக்க கோரி . கிராம மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் திப்பணம் பட்டி முதல் அரியப்பபுரம் கிராமம் வரை உள்ள 3 கி.மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவிய நகர் வரை உள்ள 4 கி.மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படுகிறது.

7 கி.மீட்டர் தூரத்தில் திப்பணம் பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி . பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் அரியப்பபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவசர தேவைகளுக்கும், பள்ளி குழந்தைகள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக கூறி 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம் - கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திப்பணம் பட்டி முதல் அரியப்பபுரம், நாட்டார்பட்டி முதல் திரவிய நகர் வரை உள்ள சேதமடைந்த கிராமப்புற இணைப்பு சாலைகளை பராமரித்து புதிய சாலைகள் அமைக்கோரியும், சேதமடைந்த சாலைகளை பராமரிக்காத அரசு கிராமப்புற நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும், போர்க்கால் அடிப்படையில் சாலைகளை பராமரிக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகள் ஒரு வார காலத்தில் நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் போன்று அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 March 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  2. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  3. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  4. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  5. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  7. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  8. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  9. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  10. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...