/* */

காந்தி ஜெயந்தி தினத்தில், தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

தென்காசியில், காந்தியடிகளின் 154வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி தினத்தில், தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்
X
காந்தி ஜெயந்தி தினமான இன்று, தீபாவளி கதர் தள்ளுபடி விற்பனை துவக்கம்.

தென்காசி மாவட்டத்தில், 154வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை துவக்க விழா, பாவூர்சத்திரம் கதர் அங்காடியில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஆகாஷ் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். குத்துவிளக்கு ஏற்றி ,விற்பனையை தொடங்கி வைத்து, வாடிக்கையாளர்களிடம் வழங்கினார்.

அதன்பின், கலெக்டர் ஆகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

காந்தியடிகளால், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்குடன், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் கீழ், தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இரண்டு கிராமிய நூற்பு நிலையங்களும், கீழப்பாவூரில் கதர் துணை கிளையும் மற்றும் பாவூர்சத்திரத்தில் கதர் அங்காடியும் செயல்பட்டு வருகிறது. இரண்டு கிராமிய நூற்பு நிலையங்களிலும் 84 நூற்பாளர்கள் மற்றும் கீழ்ப்பாவூர், வீரவநல்லூர் மற்றும் சங்கரன்கோவிலில் 15 நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் பொருளாதார நிலை உயரும். உத்தமர் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து, இத்துறையினரால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2021- 2022 ஆம் ஆண்டிற்கு ரூ.42.55 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.42.30 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் விற்பனை ரூ.41.59 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 605 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5. ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தமர் காந்தியடிகளின் 154வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் ஆகிய இடங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் 02.10.2022 முதல் தீபாவளி முடியும் வரை செயல்படும். மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30%ம், உல்லன் ரகங்களுக்கு 20%ம் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில், 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.46.25 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, கல்லூரணி ஊராட்சி தலைவர் .ராஜ்குமார் துணை தலைவர் .குமார், காதி கிராப்ட் மேலாளர் ஹென்றி ஜோசப், மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் குமரேசன், கிராம தொழில் கூட்டுறவு அலுவலர் .சரவணராஜா வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  3. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  4. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  6. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  7. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  8. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  9. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்