/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

Power Cut News -தென்காசி மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்த பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்

Power Cut News -தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. இதால் பின்வரும் துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்தர பராமரிப்பு பணிகள் இன்று (5ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துகல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைகுளம், சுந்தரபாண்டியபுரம், கீழப்புலியூர், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

அதேபோல் கல்லிடைக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநா டார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்க ம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க் காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதேபோல் மணிமு த்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப் புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மின்வாரிய செய்தி குறிப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போதிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Nov 2022 6:34 AM GMT

Related News