Begin typing your search above and press return to search.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
தென்காசியின் பொதுமக்களுக்கு ஒலி மாசு ஏற்படும் வகையில் இடையூராக இயக்கப்படும் வாகனங்களை தென்காசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி சிறப்பு தணிக்கை ஆய்வு மேற்கொண்டார். அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலைத்தில் ஆய்வு நடைபெற்றது.
இந்த சோதனையில் 12 பேருந்துகளில் பல ஒலி காற்று ஒலிப்பான்கள் ( Multi Sount Horan) பொருத்திய பேருந்துகளில் இருந்து அந்த ஒலிப்பான்களை உடனே கழற்று விட்டு அந்த பேருந்து ஓட்டுநர்களிடம் அறிவுரை கூறப்பட்டது. இனி இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி கூறினார்.