Begin typing your search above and press return to search.
தென்காசியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசியில், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு, அணைக்கட்டுகளில் உள்ள நீர் இருப்பு, ஆறு மற்றும் கால்வாய்களில் செல்லும் நீர்ப்போக்கு தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜே. சாரு ஐ.ஏ.எஸ். நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.