/* */

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருவிழாக்கள் நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம், திரவியம், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிட் 19 தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் வீதியுலாவாக உற்சவமூர்த்திகள் வாகனப் புறப்பாடு, போன்ற நிகழ்வுகள் திருக்கோயில் உள்ளே பிரகாரங்களில் நடத்தப்படும். தேரோட்டம் நடத்தப்படவில்லை. திருக்கல்யாண வைபவம் 1.11.2021 அன்று இரவு 9:00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

Updated On: 22 Oct 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை