Begin typing your search above and press return to search.
தென்காசியில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் ரத்து : இணையதளம் வழியாக மனு அனுப்பலாம்
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை இணையதளம் வழியாக அனுப்புலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
மனுக்களை https: //gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் கணினி அல்லது அலைபேசி மூலமாகவோ அல்லது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களிலோ பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.