Begin typing your search above and press return to search.
குற்றாலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது
குற்றால அருவி பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை யாரோ பறித்ததாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் த அலெக்ஸ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருவியில் குளிப்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை சேர்ந்த லதா (33), சுமித்ரா (28), ரத்னா (30), லட்சுமி (35) ஆகிய நான்கு பெண்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மீட்கப்பட்டது.