Begin typing your search above and press return to search.
தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக பிடித்தது
தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வெற்றிப் பெற்றார்.
HIGHLIGHTS
தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஒன்றியக்குழு 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட திமுகவைச் சார்ந்த கலாநிதி வெற்றி.
தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஒன்றாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவியது. இதில் திமு சார்பாக கலாநிதி, அதிமுக சார்பாக பாரதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக செல்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட கலாநிதி 2 994 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாவது இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வி 814 வாக்குகள் பெற்று பிடித்தார். அதிமுக வேட்பாளர் பாரதி 285 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.