/* */

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.

HIGHLIGHTS

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்தவர்கள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசும் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கும் 700 ஆயுள் தண்டனை கைதிகள் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிட்டு இருந்தது.

அந்த வகையில் மத பாரபட்சம் பார்க்காமல் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் 38 இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On: 24 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்