/* */

வீட்டுச் சுவர் இடிந்ததில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு : இரண்டு பேர் காயம்

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் உச்சிமகாளி அம்மன் ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் இசக்கி என்பவரது வீடு இடிந்து விழுந்தது

HIGHLIGHTS

வீட்டுச் சுவர் இடிந்ததில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு : இரண்டு பேர் காயம்
X

வீட்டுச் சுவர் இடிந்ததில் கட்டிட தொழிலாளி உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் உச்சிமகாளி அம்மன் ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் இசக்கி. இவரது வீட்டை புனரமைப்பு செய்யும் பணியில் அதே பகுதியைச் சார்ந்த முருகன், பிரசாந்த், குத்தாலிங்கம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் அவர்கள் மீது விழுந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்து விட்டார். படுங்காயங்களுடன் பிரசாந்த் மற்றும் குத்தாலிங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசாந்த் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Updated On: 23 Sep 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்