/* */

விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால் வழங்கிய ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

HIGHLIGHTS

விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால் வழங்கிய ஆட்சியர்
X

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தில் 4-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் முதல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து வந்தனர். இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விபத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்ணன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கைக் கால் பொருத்துவதற்கு உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை ஏற்று அவருக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று செயற்கை கால்களை வழங்கினார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திலேயே வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Updated On: 20 Jun 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  8. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  10. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...