/* */

தென்காசி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்

தென்காசி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்
X

தென்காசி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி போர்வெல் உரிமையாளர்கள் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி போர்வெல் உரிமையாளர் சங்க கெளரதலைவர் சங்கர நாரயணனன் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை நம்பி 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கல் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டீசல் மற்றும் போர்வெல் உதிரி பாகங்கள் கடுமையாக விலையேற்றம் காரணமாக தொழிலார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அத்தியாவசியத்தில் ஒன்றான குடிநீர் மற்றும் விவசாயிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதால் அரசு இதனை பரிசீலனை செய்து வரி விலக்கு, சலுகைகள் செய்து தரவேண்டும் என கூறினர். மேலும் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலையேற்றம் காரணமாக இனிவரும் காலங்களில் போர்வெல் அமைக்கும்போது அடிகணக்கில் மாற்றம் இருக்க கூடும் இதனை மக்கள் ஏற்றுக்கொண்டு தங்களுக்கு அதரவு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Updated On: 1 April 2022 2:32 AM GMT

Related News