/* */

கீழப்புலியூரில் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

HIGHLIGHTS

கீழப்புலியூரில் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு
X

கீழப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தென்காசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

தென்காசி மாவட்டம், சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (04/01/2022) சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கீழப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே இணையதளம் மூலமாக நடைபெற்று வரும் குற்றங்களான போலியாக செயலிகளை (App) உருவாக்கி அதன் மூலம் பாமர மக்கள்களுக்கு ஆசைகளை உருவாக்கி மாய வலையில் சிக்க வைப்பது தொடர்பாகவும், இதுபோன்ற பல்வேறு போலியான செயலிகள்( Power Bank, Fundamelon, colour Trading, Etc.,) மூலம் ஏற்படுத்தபடும் பண மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 4 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!