/* */

தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
X
பைல் படம்

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின்நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்க்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மதியம் 01:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தென்காசி உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்.

செங்கோட்டை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.

சுரண்டை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.

சாம்பவர்வடகரை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: சாம்பவர் வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம்.

Updated On: 3 Jan 2022 8:11 AM GMT

Related News