மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக்கூட்டமானது எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.
ops group discuss meet தென்காசி மாவட்டம் அதிமுகஓபிஎஸ்அணியின் ஆலோசனைக் கூட்டம் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமையில் குற்றாலத்தில் உள்ள தெட்ஷன நாடார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேசுகையில்.
உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் கரங்களை பலப்படுத்த பாடுபட வேண்டும். அதிமுக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவருக்கு இணையாக ரத்து செய்ய எவருக்கும் அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்து தொண்டர்களின் ஏகோபித்த தலைவராக ஓ பன்னீர்செல்வம் உள்ளார். அதிமுகவை வழிநடத்துவதற்கு அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் கரங்களை வலுப்படுத்துவோம் என்று தொண்டர்களிடையே பேசினார். இந்தக் கூட்டத்தில் ஆதவாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.