75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புது சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில், 75 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜெகன் தலைமை வகித்தார். செயலாளர் ஜேம்ஸ் அழகுராஜா, பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அன்னபிரகாசம், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பாய் ஜெயராணி வரவேற்றார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏ கே எஸ் டி சேர்மசெல்வம் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது,
நிகழ்ச்சியில் சபை ஊழியர் ஜான், காங்கிரஸ் பிரமுகர்கள் வெயிலுமுத்து, சுக்கிரன் மாடசாமி, டுவின்ஸ் முருகேசன், கோபால், சாலமோன், கமிட்டி உறுப்பினர்கள் ராஜன், தனபால் ராஜசேகர், ஜெயசந்திரன், கவுன்சிலர்கள் கல்பனா அன்னப்பிரகாசம், பொன்ராணி, உஷா பிரபு, ஆசிரியர்கள் ஜெயா ஜூலியட் சாந்தினி, அகிலா, சித்ரா, சாந்தகுமாரி, அன்னைமரியா, பிரபா தங்கம், அன்பு கிரேஸ், மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.