Begin typing your search above and press return to search.
தையல்கலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு
தையல்கலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு வழங்கினார்கள்.
HIGHLIGHTS
தையல்கலை தொழிலாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரிடம் மனு கொடுத்தனர்.
தென்காசி மாவட்ட தையல் கலைஞர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தையல்கலை தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா ஊரடங்கினால், தொழிலும் இன்றி, வருமானமும் இன்றி இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே தையல் கலைஞர்களுக்கு கொரோனா கால ஊரடங்கு நிவாரண நிதி வழங்கி இப்பகுதி தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.