/* */

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடார், திமுக, மதிமுக ஆகிய கூட்டணி நிர்வாகிகளுடன் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர் ராமச்சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பழனி நாடார் தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த முறை இதே தொகுதியில் நான் போட்டியிட்டேன். மோடி அரசால் வெற்றி பெற்ற என்னை தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன். தொகுதிக்கு தேவையான அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் திமுக ராஜேந்திரன், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், மாவட்ட பொதுச்செயலாளர் ஏஜிஎம் கணேசன், திமுக நகர செயலாளர் சாதிர், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்