/* */

காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு

காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
X

தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தென்காசி நகர் பகுதியில் காவல்துறையினர், எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந் நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாகவும், பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக தென்காசி நகர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதனை தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென்காசி துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு தென்காசி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தென்காசி காவல்நிலையத்தை அடைந்தது. அணிவகுப்பில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் 200 பேர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி