/* */

விவசாயிகளுக்கு ஆதரவாக இரண்டு சக்கர வாகன பேரணி

விவசாயிகளுக்கு ஆதரவாக இரண்டு சக்கர வாகன பேரணி
X

தென்காசி மாவட்டத்தில் அனைத்துக் கட்சி சார்பில் ஜனவரி 26 ம் தேதி அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26 ம் தேதி அன்று இரு சக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி முன்னிலை வகித்தார். மதிமுக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் வரும் ஜனவரி 26 ம் தேதி அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் நடைபெறும் பேரணியில் அனைத்துக் கட்சி சார்பில் திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jan 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி