Begin typing your search above and press return to search.
தெப்பக் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த முருகராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார் இவர் அடிக்கடி தெப்பக்குளத்தின் உட்பகுதியில் உள்ள சுவரில் உட்கார்ந்து மது அருந்துவது வழக்கமாம் .
மது அருந்திய முருகராஜ் நிலைதடுமாறி குளத்தில் மூழ்கி உள்ளார். அவரின் உடல் அழுகிய நிலையில் தெப்பத்தில் மிதந்துள்ளது . இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் முருகனின் உடலை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகராஜின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.