/* */

பாபநாசம் வனச்சோதனை சாவடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 43 பேர் கைது

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாபநாசம் வனச்சோதனை சாவடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 43 பேர் கைது
X

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்.

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர் ஆற்றில் நீராடவும், பொங்கலிட்டு, கிடா வெட்டவும் வனத்துறையினர் தடை விதித்து, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வாடகை ஆட்டோவில் பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை கண்டித்து பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு இந்து முன்னணி அமைப்பினர், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 8 பெண்கள் என சுமார் 43 பேர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் சாலையில் அமர்ந்து போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து வீ.கே.புரம் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 8 பெண்கள் உள்பட 43 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் கிடா வெட்டி பொங்கலிடவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும், இப்பகுதி ஆட்டோவில் பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

Updated On: 23 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா