/* */

கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா

சங்கரன்கோவில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா
X

சங்கரன்கோவில் கிராமங்களில் சிசிடிவி கேமரா பொருத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை சார்பில் கூறப்பட்டது. அதாவது கிராமங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும்,குற்றவாளிகளை எளிதாக கண்டறியும் வகையிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் தங்களது சொந்த செலவில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர். சில ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூடத்தில் தீர்மானம் போட்டு அதன் மூலமும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் டி.எஸ்.பி., ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிசிடிவி கேமராக்களை கிராமங்களில் பொருத்திய கரிவலம்வந்த நல்லூர்,சென்னிகுளம், பெரும்பத்தூர்.குவளைக் கண்ணி,கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

சிசிடிவி கேமராவை பொருத்துவதன் அவசியம் குறித்தும்,மேலும் குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க கிராம பகுதிகளில் தெரு விளக்குகள் பொருத்தவும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்