Begin typing your search above and press return to search.
பெண்ணிடம் தவறாக பேசியவர் கைது
தென்காசி மாவட்டம் குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்குளம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த முருகன் (27) என்ற நபர் அப்பெண்ணிடம் தவறான எண்ணத்தில் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அசிங்கமாக பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் குருவிகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி செவல்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகன் முருகன் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.