/* */

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்பு

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்பு
X

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லத்தீஷ். இவருடைய யமஹா பைக்கில் சீட்டுக்கு அடியில் பாம்பு இருப்பதை அறிந்த லத்தீஷ் உடனடியாக சங்கரன்கோவில் உள்ள தனியார் மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். அதிர்ந்துபோன மெக்கானிக் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி சீட்டுக்கு அடியில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரை மணி நேரத்திற்கு மேலாக பாம்பை போராடி மீட்டதனால் தீயணைப்புத் துறையினரை அப்பகுதியில் நின்றவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?