/* */

குடிநீர்த்திட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் தூசி மண்டலமாக மாறிய சங்கரன்கோயில்

*புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்*

HIGHLIGHTS

கூட்டுக்குடிநீர்த்திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் சங்கரன்கோவில் நகரம் மண்புழுதி மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கூட்டுக்குடிநீர் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டு சாலைகள் சரிவர மூடப்படாததால் சாலையிலிருந்து மண்புழுதி கிளம்பி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது .

இந்நிலையில் திருநெல்வேலி சங்கரன்கோவில் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்டு தற்போது பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்ககாதாதல் கனரக வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி கிளம்பி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

கனரக வாகனங்கள் சென்றால் பின்னால் செல்லும் இருசக்கர வாகனங்கள் முன்னே செல்லும் வாகனங்களுக்கு வழி தெரியாமல் தடுமாறும் அளவிற்கு தூசி மண்டலம் தோன்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாமதமின்றி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 3 July 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...