/* */

சங்கரன்கோவிலில் ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததால் மக்கள் அச்சம்

சங்கரன்கோவிலில் வெறிநாய் கடித்து 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததால் மக்கள் அச்சம்
X

சங்கரன்கோவிலில் ஓரே நாளில் வெறி நாய் கடித்து 50 மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் வெறிநாய் கடித்து 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாரதியார் தெரு, முல்லை நகர், கழுகுமலை ரோடு, திருவள்ளுவர் தெரு, சங்கர்நகர், கணபதி நகர் உள்ளிட்ட தெருக்களில் வெறிநாய் ஒன்று குழந்தைகளையும் பாதசாரிகளை கடித்து துன்புறுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடித்து சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெவ்வேறு தெருக்களில் சுற்றித் திரிந்து, தெருக்களில் நடமாடும் நபர்களை வெறிநாய் கடிப்பதால் வெறி நாயை பிடிக்க சங்கரன்கோவில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெறிநாய்களுக்குப் பயந்து பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 10 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்