/* */

சங்கரன்கோவில் தனியார் நூற்பாலை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 4 ஆவது நாளாக போராட்டம்

விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை வழங்கக் கோரி 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்து கின்றனர்

HIGHLIGHTS

சங்கரன்கோவில்  தனியார் நூற்பாலை  ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 4 ஆவது  நாளாக போராட்டம்
X

சங்கரன்கோவில் தனியார் நூற்பாலையின் நுழைவுவாயிலில் அமர்ந்து நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றை வழங்கக் கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 15 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு, பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்டோர் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். தற்போது வரை நிலுவைத் தொகை வழங்காததால்200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பணிக்கொடை , வருங்கால வைப்பு நிதி மற்றும் விருப்ப ஓய்வு வழங்க கோரி நூற்பாலையின் நுழைவுவாயிலில் அமர்ந்து நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது வரை ஆலை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து பேசவில்லை என்பது தொழிலாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 2 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!