/* */

சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே தீவிபத்து;. குப்பைகள் எரிந்து புகைமூட்டம்

சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே தீவிபத்து;. குப்பைகள் எரிந்து புகைமூட்டம்
X

தீப்பற்றி எரியும் கழிவுகள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில் நிலையம் எதிரில் உள்ள குடியிருப்புப் பகுதி அருகே தீவிபத்து ஏற்பட்டது. புதிதாக வீடு கட்டுவதற்கு சீர் செய்யப்பட்ட குப்பைகளை ஒரே இடத்தில் குவித்திருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தீப்பற்றி புகைமூட்டமாக காணப்பட்டது.

இதனால் அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக சங்கரன்கோயில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவாதவாறு தடுத்து தண்ணீரை கொண்டு அணைத்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுவதுமாக தீயை அணைத்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

Updated On: 16 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  2. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  3. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  4. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  5. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  6. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  7. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. ஆரணி
    ஆரணியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு