/* */

சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலையொட்டி சிறுமிக்கு விளக்கிடு கல்யாண விழா

சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலை முன்னிட்டு சிறுமிக்கு விளக்கிடு கல்யாணபாரம்பரிய சடங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலையொட்டி சிறுமிக்கு விளக்கிடு கல்யாண விழா
X

சங்கரன் கோவில் அருகே சிறுமிக்கு கல்யாண விளக்கிடு சடங்கு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் 9 வயது சிறுமிக்கு விளக்கிடு கல்யாண விழா நடைபெற்றது. விளக்கிடு என்பது கார்காத்தார் சமூகத்திற்கு உரிய ஒரு காப்பு சடங்காகும். தைப்பொங்கல் அன்று வருடந்தோறும் நடைபெறக்கூடிய ஒரு பாரம்பரிய சடங்கு ஆகும்.

இதில் பெண் குழந்தைக்கு ஐந்து, ஏழு அல்லது ஒன்பது வயது நடக்கும் பொழுது நிகழ்த்தப்படும் ஒரு காப்பு சடங்கு ஆகும். இச்சடங்கில் பெண் குழந்தைக்கு தங்க சரட்டில் நவ சக்தி நாயகியின் அம்சமாக 9 தங்கமணிகள், சிவனின் அம்சமாக 10 பவளங்கள் சேர்ந்து கோர்த்துள்ள நவதாலி என்றழைக்கப்படும் அணிகலனை அணிவித்து விளக்குகளில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்து ஆசீர்வதிக்கும் ஒரு விழா ஆகும்.

விளக்கிடு கல்யாணம் நிகழ்ச்சியில் சிறுமிக்கு அவருடைய தாத்தா நவதாலி அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு சிறுமியை மலர்கள் தூவி வாழ்த்தினர்.

தற்போது வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் நம்முடைய பாரம்பரிய சடங்குகளை தற்போதைய குழந்தைகளுக்கு சொல்லித் தரும் நிகழ்ச்சியாக விளக்கிடு கல்யாணம் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

மேலும் முதியவர்களை அனைவரும் மதித்து நடக்க வேண்டும், முதியோர் இல்லங்களை தவிர்ப்பதற்கு அனைவருக்கும் சொல்லித்தரும் பாடமாக விளக்கிடும் கல்யாண நிகழ்ச்சி இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர்.

Updated On: 16 Jan 2022 5:50 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  3. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  4. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  5. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  6. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  7. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  8. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..?...
  10. வீடியோ
    🔴LIVE :கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான்...