Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்தவர்கள் எதிரே வந்த வாகனத்தில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊமை தலைவன் பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பாண்டி என்பவர் திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ், விக்னேஷ், பாண்டி 3 பேர் மது போதையில் வேகமாக வந்து பாண்டியின் இரு சக்கர வாகனத்தில் மோதியதில், பாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மது போதையில் வந்த மூவரும் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்