/* */

கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிசிடிவி காமெரா பொருத்த வேண்டும்

அனைத்து கிராம பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பட்சத்தில் குற்றச்சம்பவங்களை வெகுவாகக் குறைக்கலாம்

HIGHLIGHTS

கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 72 கிராமங்களின் 123 ஊர் நாட்டாமைகளுடன் காவல் ஆய்வாளர் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், காவல் ஆய்வாளர் காளிராஜ் பேசியதாவது, குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பது பற்றியும், இதனை அடுத்து அனைத்து கிராம பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பட்சத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் குறைக்கலாம் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், இதில், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 72 கிராமங்களில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 123 ஊர் நாட்டாண்மைகள், காவல் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் தலைமை காவலர்கள் காவலர்கள் முருகன், முத்துசெல்வி, பேச்சியம்மாள், ராமர் பாண்டியன், குற்றாலச்சாமி, காளிராஜ், ஆறுமுகக்கனி உள்பட அனைத்து பகுதிகளின் ஊர் நாட்டாமைகளும் கலந்து கொண்டனர். முன்னதாக, அனைவருக்கும் சமூக நட்புறவை ஏற்படுத்தும் வகையில் சால்வை அணிவிக்கப்பட்டது.

Updated On: 29 Nov 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!