Begin typing your search above and press return to search.
மாற்று திறனாளிகளுக்கு உதவிய காவல் ஆய்வாளர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். மேலும் போராட்டம் முடித்து மாற்றுத்திறனாளிகள் வீடு செல்லும் வேளையில் அவர்களை தாலுகா அலுவலகத்திலிருந்து தனது காவல் வாகனம் மூலம் பேருந்து நிலையம் செல்ல உதவினார்கள். காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேய செயலுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.