Begin typing your search above and press return to search.
வீட்டில் பணம் திருடிய நபர் கைது
தென்காசி மாவட்டத்தில் வீட்டில் நுழைந்து பணத்தை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் கருப்பாயி என்பவரின் வீட்டினுள் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அவரின் மகனான சின்னத்துரை என்பவர் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் பேச்சிமுத்து (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேச்சிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.