Begin typing your search above and press return to search.
பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்: அமைச்சர் ராஜலட்சுமி
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள செவல் குளம் கிராமத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 7 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை 2 .11 கோடி மதிப்பில் திட்டமிடபட்டது. அந்த பள்ளி கட்டிடம் 2.69 ஏக்கர் பரப்பளவில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணிக்கு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந் நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.