/* */

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை.
X

தென்காசிமாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி கோவிட்19 தளர்வுகளற்ற ஊரடங்கு காலமாகிய 24.05.2021 முதல் நேற்று வரை தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நிலையம் செயல்படுத்தப்பட்டது.

இவற்றில் தென்காசி மற்றும் சங்ரன்கோவில் உழவர் சந்தைகளின் மூலம் 9 வாகனங்களும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர்நிறுவனங்கள் மூலம் 12 வாகனங்களும் இயக்கப்பட்டன. மொத்தமுள்ள 21 வாகனங்கள் மூலம் ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான 192 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரைப்படி வட்டார அளவில் வேளாண்வணிகத்துறை தோட்டக்கலைத்துறை ஊராட்சி மற்றும் நகராட்சித்துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு விற்பனை விலை கண்காணிக்கப்பட்டது.

மேலும் உழவர் சந்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக உள்ளூர் காய்கறிகள் கொள்முதல் செய்துஉடனுக்குடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.வேளாண்மை வணிகத்துறை மூலம் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான புகார் கேட்பு மையம் அமைத்து இதன் மூலம் பெறப்பட்ட புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்லதொரு தொடர்பை ஏற்ப்படுத்தி விளைபொருட்களை தங்குதடையின்றி சந்தைப்படுத்தி பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது வேளாண்மை வணிகத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம்.வாகனங்களுக்கு ஈ பாஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகவலை தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குநர் திரு.க.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

#vegetables #fruit #instanews #Tamilnadu #Agri-Commerce #DepartmentofAgricultural #Agricultural #sales #profit #farmers #farmer #veggie #agri #happy #Instanews

Updated On: 8 Jun 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்