/* */

முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்

இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பள்ளிக் குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்
X

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ, மாணவியர்.

நீலகிரியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள், சமூகநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், சிகிச்சை பெற்றுவரும் ஏர் மார்ஷல் வருண் சிங் பூரண குணமடைய பிராத்தனையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை, முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள், மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியும், பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக பள்ளியில் பள்ளி குழந்தைகள் தயார் செய்த ராணுவம் மற்றும் விமானப் படையின் செயல்பாடுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

Updated On: 12 Dec 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?